Posts

Showing posts from April, 2012

வெப்பம் சொட்டும் பூக்கள்

கவிஞர் சுவாதியின் - உலகே பூச்செண்டு- கவிதை நூலில்    நான் எழுதியுள்ள முன்னுரையின் தொடக்கப்பகுதி அ திகாலைக் காட்டின் ர்ர்ர்ங்ங்ங்....... நிலம் தெளிந்த ர்ர்ர்ங்ங்ங்...... கருக்கலில் ர்ர்ர்ங்ங்ங்...........  காயாம் பூக்களின் ர்ர்ர்ங்ங்ங்..கிறங்கடிக்கும் நறுமணத்தின் ர்ர்ர்ங்ங்ங் ஊடாக காதுகளில் சில்லிப்பாய் பாயும் வண்டுகளின் ரீங்காரம் . . . . பரந்து கிடக்கும் கண்மாயில் சலுக்... சலுக்... கணுக்காலளவு சலுக்சலுக்... வெள்ளி நீரில் தூக்கி அடி வைத்து சலுக்.... சலுக்....  நடக்கும் சிலிர்ப்பு..... திருவிழாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே புதுத்தெப்பம் கட்டுவதற்காக குளத்தில் ஊறப்போட்ட நீண்டமரங்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு கைகளால் துடுப்புபோட்டு அக்கரை சென்று மீளும் பிள்ளைப்பிராயம்....... பெருங்காற்றுக்கு எதிராய் முகங்கொடுத்து முடிக்கற்றை பின்னோக்கி விரைய எல்லைப் பொட்டலில் எடுப்புக் குதிரைகளை பார்க்க வேகநடைபோட்டுச் சென்ற திருநாள் நாட்கள்...... அருகாமை நகரத்தில் சினிமா பார்த்துவிட்டு பேருந்து இல்லாமல், நடுநிசியில், குறுக்குப் பாதைகளின் வரப்புகளில் சைக்கிள் டயரைக் கொளுத்திக் கொண்ட
Image
பாலாவின் விரல்களின் குரல்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி தொகுத்துள்ள கவிதைவெளியினிலே நூலில்    நான் எழுதியுள்ள முன்னுரை த மிழ்க்கவிதை, தனது உணர்ச்சியின் திவலைகள் சொட்டி நனைந்த காவியப் படிமானங்களிலிருந்தும், மண்ணில் கால்பதிக்காத அதீத கற்பனாவாதத்திலிருந்தும், மக்களை மறுதலித்த நிலஉடைமைக் கால கருத்தோட்டங்களிலிருந்தும், மொழியின் பூட்டப்பட்ட சட்டகங்களிலிருந்தும் வெளியேறவேண்டிய நிர்பந்தத்தை முதலில் எதிர்கொண்டவன் பாரதி.  அவன்தான் புதிய யுகத்திற்கான கவிதை மொழியோடு தமிழின் நவகவிதையை ஆரம்பித்து வைத்தான். தொடர்ந்து இந்தியத் தத்துவச் சாயலோடும், தமிழ் மரபின் ஓசையோடும் ‘எழுத்து” மற்றும் பிற கவிதை இயக்கங்கள் எழுச்சி பெற்றன.  பழைய வடிவம் மற்றும் உள்ளடக்கத் தளைகளிலிருந்து கவிதையை விடுவிக்க அவர்கள் தம் “புதுக்குரல்”;களால் முயற்சித்தனர். அவர்களுக்கு முற்றிலும் எதிர் நிலையில் நின்று புத்தாக்கம் செய்யப்பட்ட படிம, உருவக அழகுகள் கொண்ட வடிவத்தோடும், மனித குலத்தின் மாபெரும் துயரங்களுக்கு மாற்றுகாண விழைந்த உள்ளடக்கத்தோடும் வானம்பாடிகள் தங்கள் இயங்குதலை ஆரம்பித்தனர்.  இடதுசாரி கருத்தமைவுகளோடு கூடிய